Monday, October 17, 2011

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் தீமிதிப்பு உற்சவம்

ற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் மாருதசேன அரசனின் மகன் எதிர்மன்னசிங்கம் என்னும் அரசன் மட்டக்களப்புப் பிரதேசத்தை சம்மாந்துறை என்னும் இடத்தில் இராஜதானியாக அமைத்து திக்காதிபதிகளை நியமித்து ஆட்சி புரிந்து வந்தான்.
அக்கால கட்டத்தில் வட நாட்டில் உள்ள கொங்கு நகரிலிருந்து வைசிய குலத்தைச் சேர்ந்த தாதன் என்னும் விஷ்ணு பக்தர் இலங்கையில் உள்ள புனிதத் தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக் கோணேஸ்வரம், கதிர்காமம் போன்ற தலங்களை தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து தரிசித்த பின் அந்த ஆலயங்களில் தங்கி பஞ்ச பாண்டவர்களுடைய வரலாற்றைப் பாடிக்காட்டிய பின்னர் கதிர்காமத்துக்கும் சென்று வழிபட்டு பாண்டவர் வரலாற்றைப் பாடிக்காட்டி குமணை வழியாக நாகர்முனை என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலை வந்தடைந்தார்.

திருக்கோயில் முருகன் ஆலயத்தினைப் பரிபாலிப்பதற்குச் சென்ற திக்காதிபதியாக இருந்த நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வீமாப்போடி என்பவரிடம் தாதன் கொண்டு வந்த மஹாபாரத வரலாற்றைப் பாடிக்காட்டி பக்தர்களைப் பரவசப்படுத்திய தன்மையைக் கண்ட திக்காதிபதி வீமாப்போடி அவர்கள் அவரை அணுகி குசலம் விசாரித்து தனது பகுதியில் திரெளபதை அம்மன் ஆலயம் அமைத்து மஹாபாரத்தின் சிறப்புகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைக ளையும் விளக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டதன் பிரகாரம் தாதன் மனமகிழ்ச்சியோடு அம்மனின் ஆலயம் அமைய வேண்டிய இடத்தை தெரிவு செய்யும்படி விமாப்போடி திக்காதிபதியை வேண்ட அவரும் மனமகிழ்வு கொண்டவராய் கடலை அண்டயதும், ஆல், அரசு, கொடிகட்டி போன்ற மரங்கள் அடர்ந்து காணப்பட்ட ஆலஞ்சோலை என்னும் இடத்தை (தற்போதைய பாண்டிருப்புக் கிராமம்) தெரிவு செய்து கொடுத்தார். பாண்டவர்களுக்கும், திரெளபதை தேவிக்கும் ஆலயம் அமைக்கப் பட்டதனாலேயே பாண்டிருப்பு என்ற பெயர் வந்தது.
அவ்விடத்திலேயே இருந்த கொக்கட்டிய மரத்தடியில் அட்ஷரத்தைப் பதிந்து திரெளபதை அம்மன் சிலையையும், விஷ்ணு சிலையையும் வைத்து வணக்க முறைகளைக் கொண்டு வணங்கி பூசைகளையும் நடாத்தினார். தாதன் வகுத்த பூசைகள் வருடம் ஒருமுறை பதினெட்டு நாட்கள் புரட்டாதி மாதம் வரும் அமாவாசையில் வரும் செய் வாய்க்கிழமை அல்லது அமாவா சையை அண்டி வரும் செவ்வாய்க் கிழமை கொடியேற்றி பதினெட்டாவது நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு நடைபெறும்.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவத்திலே ஏழாம் நாள் பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத் திலிருந்து கிருஷ்ண பகவானை எழு ந்தருளப் பண்ணுதலும், பன்னிரெண்டாம் நாள் கலியாணக்கால் வெட்டுதல், பண்டிருப்பு வடக்கில் முஸ்லிம்கள் செறி ந்து வாழும் மருதமுனைக்கு அருகா மையில் இருக்கும் கொல்ஸ்தாப்பர் வளவிலிருந்து மேற்படி கலியாணக்கால் வெட்டிக்கொண்டு வருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மேற்படி நிகழ்வின் போது தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றி ணைந்து சிறப்பிப்பது விஷேட அம் சமாகும்.
பதின்மூன்றாம் நாள் தோரண அலங்காரப்பூசைகளையும் பதிநான்காம் நாள் மஹாவிஷ்ணுவை தோத்திரம் செய்யும் பூசையும், பதினாறாம் நாள் புதன்கிழமை வனவாசம் செல்லும் நிகழ்ச்சியும் இடம்பெறும். பதினேழாம் நாள் அருச்சுனர் சிவபெருமானைத் தியானித்து தவம்செய்து பாசுபதாஸ்திரம் பெற்றுவர தவத்திற்குப் போகும் நிகழ்ச்சி இடம்பெறும். பதினெட்டாம் நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் கடலில் குளித்து மஞ்சள் பூசி தீக்குளியை வலம்வந்து கமுகம்பூ, அரிசி கலந்து அக்கினியில் இட்டு தருமர், பூசகர் ஏனைய கொலுவிருக்கும் அனைவரும் தீமிதிக்கும் வைபவம் பார்ப்போர் மனதில் பக்திப் பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும். இவ்வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இல ங்கையின் பலபாகங்களிலும் இருந்து வந்து கலந்து அம்மனின் அருள்பெற்றுச் செல்வார்கள்.
பத்தொன்பதாம் நாள் சனிக்கிழமை பால் வார்ப்பு நிகழ்ச்சி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு மீண்டும் எழுந்தருளி நகர்வலம் வந்து ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடையும் நிகழ்ச்சி இடம்பெறும் இந்தப் பதினெட்டு நாட்களும் மகாபாரத பாராயணம் அறிஞர்களால் நடாத்துதல் விசேட அம்சமாகும்.
 

Thursday, September 8, 2011

தடம் மாறிப் போகாது என் காதல்................


உடல்களை பிரிந்து
உயிர்களை வதைக்கும் போது
ஊமையாய் அழுகிறது பார்வதியை
பிரிந்த தேவதாஷைப்போல்
உன்னையும் என்னையும்
விலக்கிவிட நினைக்கும்
உன் உறவுகளை நினைத்து
ஊமையாய் அழுகிறது நம் காதல் செடி
அன்பு கொண்ட உள்ளங்களை
அந்தஸ்து மறைக்கலாம் ஆனால்
உயிரால் செதுக்கி வைத்த உண்மை
காதலை மனசை விட்டு மறைக்கலாமா?
காதலின் வலி என்னவென்று
கண்ணீரை கேட்டுப்பார்த்தேன்
விழிகளும் ஒட்டிப் போனது
என் விழி நீரும் வற்றி போனது
நினைத்துவிட்ட காதலை புதைத்து
விடச்சொன்னால் புண்படுகிறது நெஞ்சம்
ஈட்டியாய பாயும் ஈசல்களை நினைத்து
கண்ணீராய் பாய்கிறது நேசம்
உன் இதயம் இடம் விட்டு சென்றாலும்
தடம் மாறிப் போகாது புடம் போடும்
என் காதல் என் தேவியே..

Thursday, August 11, 2011

ஒரு நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே!!!



அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட .................

Monday, August 8, 2011

சிந்திக்க சில துளிகள்.....

















நண்பர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்....

Friday, August 5, 2011

கணணி பயன்பாடுகளை வேகமாக திறக்க

கணணி என்றாலே வேகம் என்றுதான் பொருள், இப்படி இருக்க கணணியில் இருக்கும் பயன்பாடுகளை அணுகுவதில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என்று நம்மில் பலர் நினைப்பீர்கள்.
ஒரு சிலர் கணணியில் உள்ள பயண்பாடுகளை வேகமாக அணுகுவதற்கு டாஸ்க்பாரில் ஐகானை செட் செய்து வைத்திருப்பார்கள். இதில் ஒரு சில பயன்பாடுகளை மட்டுமே பெற முடியும். சிஸ்ட்டம் ட்ரேயில் இருந்தவாறு பல்வேறு விதமான பயன்பாடுகளை பெற ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் விரைவாகவும் எளிமையாவும் பயன்பாடுகளை பெற முடியும்.


அற்புதங்கள் பல படைக்கும் களுதாவளை பிள்ளையார்




மூல மூர்த்தியாக சிவலிங்கத்தைக் கொண்டு பிள்ளையாரை வழிபாடு செய்யும் திருத்தலங்கள் இந்த உலகிலேயே மிக அரியதாகவே காணப்படுகின்றன.இந்த வரிசையில் அற்புதங்கள் பல படைக்கும் புதுமையான திருத்தலமாக விளங்குவதுதான் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம்.

பேஸ்புக்கிலிருந்து விலகிய மார்க் ஸூக்கர் பேர்க்கின் சகோதரி: கூகுள் + உடன் இணைவாரா? _

 பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பேர்க்கின் சகோதரியும், அச் சமூகவலையமைப்பின் சந்தைப்படுத்தல் இயக்குநருமான ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் வேறு ஓர் ஊடக நிறுவனத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனாலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது இராஜினாமாக் கடிதத்தினையும் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். 

ஜோடிகள் முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் திருமணமானவர்களில் 5-ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை.

அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது.

இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்து இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது. 

Thursday, August 4, 2011

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹர்பஜன் விலகல்

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இன்றி தவித்தார் ஹர்பஜன். டிரெண்ட்பிரிட்ஜ்ஜில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம்பட்டது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமாக இரண்டு விக்கெட்களே சாய்த்தார் ஹர்பஜன். ட்ரெண்ட்பிரிட்ஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒன்பது ஓவர்களே வீசினார்.
ஆனால் துடுப்பெடுத்தாடும் போது 46 ரன்கள் சேர்த்தார். எனவே அவரது உடற்காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு காயம் பட்டிருக்கிறது என்றும் அவர் 10லிருந்து 12 நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்லும் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் ஹர்பஜன் மிகவும் மோசமான பார்ம் காரணமாக விலக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பை அவர் வீணடித்துவிட்டார் என்கின்றனர்.

வைரத்தின் மீது தனி பிரியம்: காஜல் அகர்வால்


தமிழ், தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால்.
இந்தியிலும் நடிக்கிறார். மும்பையில் நடந்த சர்வதேச நகை கண்காட்சிக்கு காஜல் அகர்வாலை விழாக்குழுவினர் அழைத்தனர்.



அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் விதவிதமான நகைகளை அணிந்து மேடையில் நடந்தார்.
கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதாவது:- நகை கண்காட்சியில் நகைகளை அணிந்து நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இதற்காக பயிற்சி எடுக்கவில்லை. சென்னையில் இருந்து வந்து இறங்கியதும் இதில் பங்கேற்றேன். நகைகளில் எனக்கு வைர நகைகளை பிடிக்கும். குறிப்பாக வைர மோதிரம் அணிய ரொம்ப ஆர்வம்.
எனக்கு வைர மோதிரம் ஒன்றை எனது தந்தை பரிசாக கொடுத்துள்ளார். அதை எப்போதும் அணிகிறேன்.
என் தந்தை பரிசாகக் கொடுத்த காரணத்தால், அந்த மோதிரத்தை எப்போதும் கழட்டாமல் அணிந்து வருகிறேன்.

Wednesday, August 3, 2011

நாளை பிறந்த நாளை கொண்டாட இருக்கும் என் அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..............​..................


கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே... 
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்... 
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே... 
எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு... 

கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு.. 

பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்.. 
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்... 


மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே, 
அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்.... 
இது "நீ".. 
உனக்கென ஒரு பாதை.. 
உனக்கென ஒரு பயணம்.. 
உன்னோடு சில பயணிகள்.. 
தேர்வு உன் கையில்... 

இது நீ "பிறந்த நாள்" அல்ல.. 
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்... 
உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன் 

பல்லாண்டு காலம் வாழ்க... 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தோழியா இல்லை காதலியா?

உயிர் பிரிந்து போகும் போது உயிராய் வந்தவளே 
மனமுடைந்து போகும் போதெலாம் மருந்தாய் ஆனவளே 
சிறகிழந்து நிற்கையில சிறகு தந்தவளே 
நிலையிழந்த போது நினைவு தந்தவளே 
தோற்கும் போதெல்லாம் தோள் தந்தவளே
 
எனக்காக நீ அழும்போது எனக்குள்ளே ஒரு கேள்வி 
நீ என் தோழியா இல்லை காதலியா?






கடற்கரை நாம் சென்று கட்டிய மணல் வீடு
ஓடை எங்கும் ஓடிவிளையாடி
உல்லாசமாய் திரைப்படம் பார்த்து
ஓரக்கண்களால் உயிர் தடவி
விடைபெறும் போது விழி கலங்குதே?
நீ என் தோழியா இல்லை காதலியா?
பசியோடு நான் இருந்தால்
பரிவோடு நீ நோக்கி
அன்போடு எனக்கு ஊட்டி
அம்மாவாய் ஆனவளே
அன்போடு அரவணைத்த நீ எந்தன்
தோழியா இல்லை காதலியா?

2011 Our Staff Calender Slideshow

2011 Our Staff Calender Slideshow: "TripAdvisor™ TripWow ★ 2011 Our Staff Calender Slideshow ★ to Batticaloa. Stunning free travel slideshows on TripAdvisor"