மனமுடைந்து போகும் போதெலாம் மருந்தாய் ஆனவளே
சிறகிழந்து நிற்கையில சிறகு தந்தவளே
நிலையிழந்த போது நினைவு தந்தவளே
தோற்கும் போதெல்லாம் தோள் தந்தவளே
எனக்காக நீ அழும்போது எனக்குள்ளே ஒரு கேள்வி
நீ என் தோழியா இல்லை காதலியா?
கடற்கரை நாம் சென்று கட்டிய மணல் வீடு
ஓடை எங்கும் ஓடிவிளையாடி
உல்லாசமாய் திரைப்படம் பார்த்து
ஓரக்கண்களால் உயிர் தடவி
விடைபெறும் போது விழி கலங்குதே?
நீ என் தோழியா இல்லை காதலியா?
ஓடை எங்கும் ஓடிவிளையாடி
உல்லாசமாய் திரைப்படம் பார்த்து
ஓரக்கண்களால் உயிர் தடவி
விடைபெறும் போது விழி கலங்குதே?
நீ என் தோழியா இல்லை காதலியா?
பசியோடு நான் இருந்தால்
பரிவோடு நீ நோக்கி
அன்போடு எனக்கு ஊட்டி
அம்மாவாய் ஆனவளே
அன்போடு அரவணைத்த நீ எந்தன்
தோழியா இல்லை காதலியா?
பரிவோடு நீ நோக்கி
அன்போடு எனக்கு ஊட்டி
அம்மாவாய் ஆனவளே
அன்போடு அரவணைத்த நீ எந்தன்
தோழியா இல்லை காதலியா?

No comments:
Post a Comment